Selected
                        Original Text
                        
                    
                
                    
                        Jan Turst Foundation
                        
                        
                        
                    
                
                Abdullah Yusuf Ali
Abdul Majid Daryabadi
Abul Ala Maududi
Ahmed Ali
Ahmed Raza Khan
A. J. Arberry
Ali Quli Qarai
Hasan al-Fatih Qaribullah and Ahmad Darwish
Mohammad Habib Shakir
Mohammed Marmaduke William Pickthall
Muhammad Sarwar
Muhammad Taqi-ud-Din al-Hilali and Muhammad Muhsin Khan
Safi-ur-Rahman al-Mubarakpuri
Saheeh International
Talal Itani
Transliteration
Wahiduddin Khan
                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                
                
                    In the name of Allah, Most Gracious, Most Merciful.
                
            
                    51:1
                    وَٱلذَّٰرِيَـٰتِ ذَرْوًا
                
                
                
                
                
                    51:1
                    (புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:2
                    فَٱلْحَـٰمِلَـٰتِ وِقْرًا
                
                
                
                
                
                    51:2
                    (மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:3
                    فَٱلْجَـٰرِيَـٰتِ يُسْرًا
                
                
                
                
                
                    51:3
                    பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:4
                    فَٱلْمُقَسِّمَـٰتِ أَمْرًا
                
                
                
                
                
                    51:4
                    (பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:5
                    إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌ
                
                
                
                
                
                    51:5
                    நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:6
                    وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌ
                
                
                
                
                
                    51:6
                    அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:7
                    وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ
                
                
                
                
                
                    51:7
                    அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:8
                    إِنَّكُمْ لَفِى قَوْلٍ مُّخْتَلِفٍ
                
                
                
                
                
                    51:8
                    நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:9
                    يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
                
                
                
                
                
                    51:9
                    அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:10
                    قُتِلَ ٱلْخَرَّٰصُونَ
                
                
                
                
                
                    51:10
                    பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:11
                    ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍ سَاهُونَ
                
                
                
                
                
                    51:11
                    வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:12
                    يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ
                
                
                
                
                
                    51:12
                    (நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:13
                    يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ
                
                
                
                
                
                    51:13
                    நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:14
                    ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ
                
                
                
                
                
                    51:14
                    "உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:15
                    إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ
                
                
                
                
                
                    51:15
                    நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:16
                    ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ
                
                
                
                
                
                    51:16
                    அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:17
                    كَانُوا۟ قَلِيلًا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ
                
                
                
                
                
                    51:17
                    அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:18
                    وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
                
                
                
                
                
                    51:18
                    அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:19
                    وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
                
                
                
                
                
                    51:19
                    அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:20
                    وَفِى ٱلْأَرْضِ ءَايَـٰتٌ لِّلْمُوقِنِينَ
                
                
                
                
                
                    51:20
                    உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:21
                    وَفِىٓ أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ
                
                
                
                
                
                    51:21
                    உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:22
                    وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ
                
                
                
                
                
                    51:22
                    அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:23
                    فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ
                
                
                
                
                
                    51:23
                    ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:24
                    هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ
                
                
                
                
                
                    51:24
                    இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:25
                    إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَـٰمًا ۖ قَالَ سَلَـٰمٌ قَوْمٌ مُّنكَرُونَ
                
                
                
                
                
                    51:25
                    அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:26
                    فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍ سَمِينٍ
                
                
                
                
                
                    51:26
                    எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:27
                    فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
                
                
                
                
                
                    51:27
                    அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:28
                    فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَـٰمٍ عَلِيمٍ
                
                
                
                
                
                    51:28
                    (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:29
                    فَأَقْبَلَتِ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ
                
                
                
                
                
                    51:29
                    பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:30
                    قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ
                
                
                
                
                
                    51:30
                    (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:31
                    ۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
                
                
                
                
                
                    51:31
                    (பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:32
                    قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍ مُّجْرِمِينَ
                
                
                
                
                
                    51:32
                    "குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:33
                    لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ
                
                
                
                
                
                    51:33
                    "அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:34
                    مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
                
                
                
                
                
                    51:34
                    "வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:35
                    فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ
                
                
                
                
                
                    51:35
                    ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:36
                    فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ ٱلْمُسْلِمِينَ
                
                
                
                
                
                    51:36
                    எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:37
                    وَتَرَكْنَا فِيهَآ ءَايَةً لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
                
                
                
                
                
                    51:37
                    நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:38
                    وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَـٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَـٰنٍ مُّبِينٍ
                
                
                
                
                
                    51:38
                    மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:39
                    فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَـٰحِرٌ أَوْ مَجْنُونٌ
                
                
                
                
                
                    51:39
                    அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:40
                    فَأَخَذْنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَـٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌ
                
                
                
                
                
                    51:40
                    ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:41
                    وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ
                
                
                
                
                
                    51:41
                    இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:42
                    مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ
                
                
                
                
                
                    51:42
                    (க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:43
                    وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍ
                
                
                
                
                
                    51:43
                    மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); "ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:44
                    فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّـٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ
                
                
                
                
                
                    51:44
                    அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:45
                    فَمَا ٱسْتَطَـٰعُوا۟ مِن قِيَامٍ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ
                
                
                
                
                
                    51:45
                    ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:46
                    وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا فَـٰسِقِينَ
                
                
                
                
                
                    51:46
                    அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:47
                    وَٱلسَّمَآءَ بَنَيْنَـٰهَا بِأَيْي۟دٍ وَإِنَّا لَمُوسِعُونَ
                
                
                
                
                
                    51:47
                    மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:48
                    وَٱلْأَرْضَ فَرَشْنَـٰهَا فَنِعْمَ ٱلْمَـٰهِدُونَ
                
                
                
                
                
                    51:48
                    இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:49
                    وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
                
                
                
                
                
                    51:49
                    நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:50
                    فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
                
                
                
                
                
                    51:50
                    ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:51
                    وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌ
                
                
                
                
                
                    51:51
                    மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:52
                    كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
                
                
                
                
                
                    51:52
                    இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:53
                    أَتَوَاصَوْا۟ بِهِۦ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَ
                
                
                
                
                
                    51:53
                    இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:54
                    فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍ
                
                
                
                
                
                    51:54
                    ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:55
                    وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ
                
                
                
                
                
                    51:55
                    மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:56
                    وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
                
                
                
                
                
                    51:56
                    இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:57
                    مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ
                
                
                
                
                
                    51:57
                    அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:58
                    إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ
                
                
                
                
                
                    51:58
                    நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:59
                    فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَـٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ
                
                
                
                
                
                    51:59
                    எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    51:60
                    فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ
                
                
                
                
                
                    51:60
                    ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.  - Jan Turst Foundation (Tamil)