Selected
                        Original Text
                        
                    
                
                    
                        Jan Turst Foundation
                        
                        
                        
                    
                
                Abdullah Yusuf Ali
Abdul Majid Daryabadi
Abul Ala Maududi
Ahmed Ali
Ahmed Raza Khan
A. J. Arberry
Ali Quli Qarai
Hasan al-Fatih Qaribullah and Ahmad Darwish
Mohammad Habib Shakir
Mohammed Marmaduke William Pickthall
Muhammad Sarwar
Muhammad Taqi-ud-Din al-Hilali and Muhammad Muhsin Khan
Safi-ur-Rahman al-Mubarakpuri
Saheeh International
Talal Itani
Transliteration
Wahiduddin Khan
                    بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
                
                
                    In the name of Allah, Most Gracious, Most Merciful.
                
            
                    52:1
                    وَٱلطُّورِ
                
                
                
                
                
                    52:1
                    தூர் (மலை) மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:2
                    وَكِتَـٰبٍ مَّسْطُورٍ
                
                
                
                
                
                    52:2
                    ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:3
                    فِى رَقٍّ مَّنشُورٍ
                
                
                
                
                
                    52:3
                    விரித்து வைக்கப்பட்ட,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:4
                    وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ
                
                
                
                
                
                    52:4
                    பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:5
                    وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ
                
                
                
                
                
                    52:5
                    உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:6
                    وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ
                
                
                
                
                
                    52:6
                    பொங்கும் கடலின் மீது சத்தியமாக!  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:7
                    إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ
                
                
                
                
                
                    52:7
                    நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:8
                    مَّا لَهُۥ مِن دَافِعٍ
                
                
                
                
                
                    52:8
                    அதனைத் தடுப்பவர் எவருமில்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:9
                    يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا
                
                
                
                
                
                    52:9
                    வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:10
                    وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا
                
                
                
                
                
                    52:10
                    இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:11
                    فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
                
                
                
                
                
                    52:11
                    (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:12
                    ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ
                
                
                
                
                
                    52:12
                    எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:13
                    يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا
                
                
                
                
                
                    52:13
                    அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:14
                    هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
                
                
                
                
                
                    52:14
                    அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:15
                    أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ
                
                
                
                
                
                    52:15
                    "இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:16
                    ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
                
                
                
                
                
                    52:16
                    "நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:17
                    إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَعِيمٍ
                
                
                
                
                
                    52:17
                    நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:18
                    فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ
                
                
                
                
                
                    52:18
                    அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:19
                    كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
                
                
                
                
                
                    52:19
                    (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்."  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:20
                    مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ
                
                
                
                
                
                    52:20
                    அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:21
                    وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَـٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَـٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌ
                
                
                
                
                
                    52:21
                    எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:22
                    وَأَمْدَدْنَـٰهُم بِفَـٰكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ
                
                
                
                
                
                    52:22
                    இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:23
                    يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ
                
                
                
                
                
                    52:23
                    (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:24
                    ۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ
                
                
                
                
                
                    52:24
                    அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:25
                    وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
                
                
                
                
                
                    52:25
                    அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:26
                    قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ
                
                
                
                
                
                    52:26
                    "இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:27
                    فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ
                
                
                
                
                
                    52:27
                    "ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:28
                    إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ
                
                
                
                
                
                    52:28
                    "நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்."  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:29
                    فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ
                
                
                
                
                
                    52:29
                    எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:30
                    أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ
                
                
                
                
                
                    52:30
                    அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:31
                    قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ
                
                
                
                
                
                    52:31
                    "நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:32
                    أَمْ تَأْمُرُهُمْ أَحْلَـٰمُهُم بِهَـٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ
                
                
                
                
                
                    52:32
                    அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:33
                    أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ
                
                
                
                
                
                    52:33
                    அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:34
                    فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ
                
                
                
                
                
                    52:34
                    ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:35
                    أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَـٰلِقُونَ
                
                
                
                
                
                    52:35
                    அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:36
                    أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ
                
                
                
                
                
                    52:36
                    அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:37
                    أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ
                
                
                
                
                
                    52:37
                    அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:38
                    أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ
                
                
                
                
                
                    52:38
                    அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:39
                    أَمْ لَهُ ٱلْبَنَـٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ
                
                
                
                
                
                    52:39
                    அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:40
                    أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
                
                
                
                
                
                    52:40
                    அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:41
                    أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
                
                
                
                
                
                    52:41
                    அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:42
                    أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ
                
                
                
                
                
                    52:42
                    அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:43
                    أَمْ لَهُمْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ
                
                
                
                
                
                    52:43
                    அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:44
                    وَإِن يَرَوْا۟ كِسْفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُوا۟ سَحَابٌ مَّرْكُومٌ
                
                
                
                
                
                    52:44
                    வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:45
                    فَذَرْهُمْ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ
                
                
                
                
                
                    52:45
                    ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:46
                    يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ
                
                
                
                
                
                    52:46
                    அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:47
                    وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
                
                
                
                
                
                    52:47
                    அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:48
                    وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ
                
                
                
                
                
                    52:48
                    எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,  - Jan Turst Foundation (Tamil)
                
                
                
                
                
                    52:49
                    وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَـٰرَ ٱلنُّجُومِ
                
                
                
                
                
                    52:49
                    இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!  - Jan Turst Foundation (Tamil)